தஞ்சை: 30% தள்ளுபடி வழங்க நெசவாளர்கள் வலியுறுத்தி நூதன போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருபுவனம் நெசவாளர் சங்கத்தில், 102 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளதாகவும், எனவே தேங்கியுள்ள பட்டு புடவைகளுக்கு, அரசு 30 சதவீதம் தள்ளுபடி மாநியம் வழங்கவேண்டும், கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று பாய், தலையணை, பெட்ஷீட் விரித்து நெசவாளர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். 

Night
Day